அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி 4 வழிச் சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளான வேன்.








