தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

‘தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்’: பஞ்சாப் முதல்வர்

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், தேர்தலை கருத்தில் கொண்டு தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக பஞ்பாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

News image
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்
Updated On :1 பிப்ரவரி 2021, 1:16 pm

ANI


நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், தேர்தலை கருத்தில் கொண்டு தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக பஞ்பாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இந்நிலையில் நிதிநிலை அறிக்கை குறித்து பஞ்சாப் முதல்வர் கூறியதாவது,

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எல்லைகளில் பிரச்னைகள் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்புத் துறைக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் கரோனா நெருக்கடி சூழலில் சுகாதாரத்துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் மற்ற வட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் போதுமான திட்டங்கள் ஒதுக்கப்படவில்லை. மேற்குவங்கம் மற்றும் தென் மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.