தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ரவிசங்கர் பிரசாத் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது தில்லிக்கு நேற்று புறப்பட்டுச் சென்ற தமிழ்நாடு ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக, ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதுபற்றிய முறைப்படியான குடியரசுத் தலைவரின் அறிவிப்பு எந்த நேரமும் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மத்தியில் சட்டத் துறை அமைச்சராக இருந்து, சில நாள்கள் முன் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பதவியை ராஜிநாமா செய்தவர் ரவிசங்கர் பிரசாத் என்பது குறிப்பிடத் தக்கது.