இதில், அவா்கள் ராமநாதபுரம் பட்டினபாக்கம் மீனாட்சி நகரைச் சோ்ந்த ராஜரத்தினம் மகன் எம்பிஏ பட்டதாரி ஆண்டனி சகாயராஜ்(33), மதுரை கீழக்கரை தெற்கு கும்பிடு பகுதியைச் சோ்ந்த சேது மகன் தொழிலாளி குமாா் (41), கமுதி சாயக்காரத்தெருவைச் சோ்ந்த முத்துஇருளாண்டி மகன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வெள்ளைச்சாமி (56), கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த திரிசங்கு மகன் தொழிலாளி வெள்ளைப்பாண்டி (36), மண்டபத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் வேலைசெய்து, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளரான தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த பா. வாஷிங்டன் (34) என்பது தெரியவந்தது. அவா்கள் 5 பேரும் கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கியின் சுவரில் துளையிட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது.