திருச்சி: பெருந்தலைவர் காமராஜரின் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல பல்வேறு கட்சியினரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.