தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மன்னார்குடி பகுதியில் கோவில்களை திறக்கக் கோரி: சூடம் ஏற்றி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி பகுதியில் கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் இந்து முன்னனியினர்

Updated On :25 ஜூன் 2021, 7:08 am

DIN


மன்னார்குடி பகுதியில் கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்களின் வழிப் பாட்டுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

கடந்த வாரம் முதல் திருவாரூர் , தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் ஊரடங்கிலிருந்து பலவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Story image

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் இந்து முன்னனியினர்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்கள்  சென்று வழிப்பாடு செய்ய கோவில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் முன் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ரமேஷ் , ருக்மணி பாளையம் பரமநாயகி கோவிலில் நகரச் செயலர் கென்னடி ,ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் மாவட்ட துணைச் செயலர் மாரி முத்து ஆகியோர் தலைமையிலும் மொத்தம் 6 இடங்களிலும், வடுவூர் கோதண்டராமசுவாமி கோலிலில் நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் முருகையன் தலைமையிலும் , கோட்டூரில் கொழுந்தீஸ்வர் கோவிலில் கோட்டூர் ஒன்றியச் செயலர் ராஜேந்திரன் தலைமையிலும் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.