திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

மதுரை திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 
திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்


மதுரை திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில்  செங்கப்படை வாக்குச்சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவு எண் மாறுப்பட்டிருந்தால்  திமுக புகார் அளித்தனர். 

மேலும் திமுக வேட்பாளர் மணிமாறன் மற்றும் முகவர்கள் தேர்தல் பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com