புதுவையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
புதுவையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
புதுவையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர் காமம், காமராஜா் நகா், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம் ஆகிய 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள தாகூா் அரசு கலைக் கல்லூரி, அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு காவல்துறி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையங்களைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com