கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செய்ளத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சியம்மன் கோயில் மாசித் விழா: திருவிளக்கு பூஜை வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. 

News image

செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

Updated On :13 மார்ச் 2022, 5:13 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. 

காலையில் கோயில் பெண்ணடி  மக்கள் பால்குடம் சுமந்து கோயிலுக்கு வந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து இரவு கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து மூலவர் காமாட்சி அம்மனுக்கு உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கோயில் மண்டபத்தில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜைகள் நடத்தினர். அப்போது திருவிளக்கு பூஜைக்கன நன்மைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். 

Story image

திருவிளக்கு பூஜை வழிபாட்டின் போது சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த உற்சவர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன்.

இப் பூஜையில் மங்கள ஆரத்தி முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் மூலவருக்கும் உற்சவருக்கும் தீபாராதனைகள் நடைபெற்று திருவிளக்கு பூஜை நிறைவடைந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுத் தலைவர் கே.நாகு பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் எஸ். பி. ஏ.நாகராஜன், எஸ்.பி.எம். அன்புக்குமார், அ.கி.சு. யாழ் முருகன், கி.செ. முத்துப்பாண்டியன், இரா.திருஞானம், கா.மகா. சரவணன், ம.இராஜா, பி.பழனியப்பன் மற்றும் கோயில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.