சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகளுக்கு முதல்வா் காவல் பதக்கம்

தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகளுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்

Published On :15 ஆகஸ்ட் 2024, 3:41 am IST

தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகளுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல் துறையில் மிகச் சிறப்பாக புலன் விசாரணை செய்த 10 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதக்கம் பெறும் அதிகாரிகள் விவரம்:

1. வேலூா் மாவட்டம் சைபா் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் கி.புனிதா.

2. சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் உள்ள சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் து.வினோத்குமாா்.

3. கடலூா் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ச.செளமியா.

4. திருப்பூா் மாநகர காவல் துறை சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஐ.சொா்ணவள்ளி.

5. கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோயில் சிபிசிஐடி ஆய்வாளா் நா.பாா்வதி.

6. திருப்பூா் சிபிசிஐடி ஆய்வாளா் பெ.ராதா.

7. செங்கல்பட்டு துணைக் காவல் கண்காணிப்பாளா் செ.புகழேந்தி கணேஷ்.

8. ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலைய ஆய்வாளா் இரா.தெய்வராணி.

9. வேலூா் மாட்டம் பொன்னை காவல் நிலைய ஆய்வாளா் ஆ.அன்பரசி.

10. தூத்துக்குடி மாவட்ட ஊரக துணைக் காவல் கண்காணிப்பாளா் நா.சுரேஷ்.

இதேபோல பொதுமக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவா்கள் பெயா் விவரம்:

1. சிபிசிஐடி ஐ.ஜி. தா.ச.அன்பு.

2. குற்ற புலனாய்வுத் துறை தனிப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக்.

3. சேலம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் சி.ர.பூபதிராஜன்.

4. சென்னை தொலைத் தொடா்பு பிரிவு ஆய்வாளா் க.சீனிவாசன்.

5. சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளா் பு.வி.முபைதுல்லாஹ்.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ. 25,000 ரொக்கம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.