நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தகுதி பெறாத விமானிகள் இயக்கிய விமானம்: ஏர் இந்தியாவுக்கு 90 லட்சம் அபராதம்!

ஏர் இந்தியாவின் செயல்பாட்டு இயக்குநருக்கு ரூ. 6 லட்சமும், பயிற்சி இயக்குநருக்கு ரூ. 3 லட்சமும் அபராதம்.

News image

ஏர் இந்தியா விமானம்

DIN

Updated On :23 ஆகஸ்ட் 2024, 1:01 pm

DIN

தகுதி பெறாத விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இயங்கும் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா விமானங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயனிக்கின்றனர்.

இந்நிலையில், தகுதி பெறாத விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரத்தில், டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ. 90 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியாவின் செயல்பாட்டு இயக்குநருக்கு ரூ. 6 லட்சமும், பயிற்சி இயக்குநருக்கு ரூ. 3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 10 ஆம் தேதி ஏர் இந்தியா விமான நிறுவனம் சமர்பித்த தன்னார்வ அறிக்கையின் மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பயிற்சி பெறாத விமானி, விமானத்தை இயக்கிய நிலையில், விமானப் போக்குவரத்து இயக்கநரகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறமால் இருக்க சம்பந்தப்பட்ட விமானியை எச்சரிக்கையுடன் இருக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்கநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.