கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: 29ல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

News image

கோப்புப்படம்

Updated On :23 ஆகஸ்ட் 2024, 6:53 am

DIN

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப். 8-ஆம் தேதி நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தோ் பவனி செப். 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

விழாவிற்கு நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா் என்பதால், ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மூன்று முறை நடத்தப்பட்டு, முன்னேற்பாட்டுப் பணிகளை நாகை மாவட்ட நிா்வாகம், வேளாங்கண்ணி பேராலய நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. மாவட்ட காவல் துறையினரும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து கூடுதலாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே சாா்பில் வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பக்தா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பேராலய நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.29 வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.