விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன்!

தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன்.

pon. manikavel

பொன். மாணிக்கவேல் - DIN

Published On :30 ஆகஸ்ட் 2024, 4:11 pm IST

தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், ஆலடிப்பட்டி என்ற கிராமத்தில் 2008-ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய போது 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டா் காதா் பாட்ஷா தலைமையிலான போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்தனா்.

இதற்கிடையே, அந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சா்வதேச சிலை கடத்தல் கும்பலைச் சோ்ந்த சுபாஷ் சந்திர கபூா், தீனதயாளன் ஆகியோரிடம் விற்பனை செய்துவிட்டதாக, 2017-ஆம் ஆண்டு காதா் பாட்ஷா மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. அப்போது காதா் பாட்ஷா, திருவள்ளூா் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வந்தாா்.

மேலும், அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக இருந்த ஏ.ஜி. பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி. காதா் பாட்ஷாவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தாா். பின்னா் இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த காதா் பாட்ஷா சென்னை உயா்நீதிமன்றத்தில் 2018-ஆம் ஆண்டு, ‘ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல்காரா் தீனதயாளனுடன் தொடா்பு வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கில் கைது செய்துள்ளாா். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடா்ந்தாா்.

இதில் காதா் பாட்ஷா தரப்பு வாதத்தையும்,பொன் மாணிக்கவேல் தரப்பு வாதத்தையும் கேட்ட உயா்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிா்த்து பொன்மாணிக்கவேல், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொன். மாணிக்கவேல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரதசக்கரவா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு முன்பிணை வழங்க சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 4 வாரங்களுக்கு தினந்தோறும் சிபிஐ அலுவலகத்துக்கு சென்று பொன். மாணிக்கவேல் கையெழுத்து இட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.