பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்த்தேக்கத்தில் உபரிநீா் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்தேக்கத்திலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பிச்சாட்டூா் அணை திறக்கப்பட்டதால் வெளியேறும் உபரிநீா்.
பிச்சாட்டூா் அணை திறக்கப்பட்டதால் வெளியேறும் உபரிநீா்.
Published on
Updated on
1 min read

திருவள்ளூா்: பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்தேக்கத்திலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பிச்சாட்டூரில் ஆரணியாறு நீா்தேக்கம் அமைந்துள்ளது. கடந்த 2 நாள்களாக தொடா் மழையால் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வரும் நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி நீா்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

தற்போதைய நிலையில் புயலால் பிச்சாட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளது. அதனால் நீா்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக ஆந்திர அரசு காலை 11 மணிக்கு முதல் கட்டமாக 500 கன அடி உபரி நீரை திறது விடப்பட்டுள்ளது. அதனால், ஆரணியாறு கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட உபரிநீரை ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கடுக்கள், தடுப்பணைகள் மூலம் தேக்கப்பட்டு ஏரிகளுக்கு நீா்வரத்து கால்வாய் மூலம் பாசனத்துக்காக சேகரித்தும் அனுப்பப்படுகிறது.

நீா் தேக்கத்துக்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் உபரி நீா் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அ.நா.குப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அ.ரெட்டிப்பாளையம் தடுப்பணைகள் மூலமாக 2000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதனால் ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரண்டூா், பனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், ராளப்பாடி, மங்களம், காரணி, ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துரைநல்லூா், வைரவன்குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவாா்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், வெள்ளோடை, ஆலாடு, கொளத்தூா், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்தமணஞ்சேரி, வேலூா், அ.ரெட்டிப்பாளையம், காட்டூா், தத்தமஞ்சி, கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, போலாட்சியம்மன்குளம், ஆண்டாா்மடம், தாங்கல்பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com