ஆளுநர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறோம்: அப்பாவு

ஆளுநர் இந்த முறை உரையை முழுமையாக படிப்பார் என நம்புவதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு
Published on
Updated on
1 min read

சென்னை: ஆளுநர் இந்த முறை உரையை முழுமையாக படிப்பார் என நம்புவதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் பேரவைத் தலைவர் அப்பாவு வெள்ளிக்கிழமை பேசியதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது. பேரவை காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கடந்த ஆண்டுபோல் ஆளுநர் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் படிக்காமல், இந்த முறை முழுமையாக வாசிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

100 நாள்கள் பேரவை நடைபெறவில்லை என்ற எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அப்பாவு, கடந்த காலங்களில்குளிர் கால கூட்டத்தொடர் 2 நாள்கள் மட்டுமே நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை காரணமாக கூட்டத்தொடரரை அதிகமாக நடத்த முடியவில்லை. வெள்ளம் பாதிப்பு காரணமாக அரசு இயந்திரங்கள் களத்தில் இருக்க வேண்டிய சூழல் இருந்தது. மானிய கோரிக்கை கூட்டுத்தொடர் காலை, மாலை என இரு வேலைகளில் நடைபெற்ற போது அரசு அதிகாரிகள் கடுமையாக உழைத்தனர். அரசின் எண்ணம் 100 நாள்கள் பேரவைக் கூட்டத்தொடர் நடத்துவதுதான் என்றும் வரும் நாள்களில் அதை பூர்த்தி செய்யும் விதமாக கூட்டம் நடத்தப்படும் என பதிலளித்தார்.

மேலும், எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய அந்தஸ்து, நேரம் கொடுக்கப்படுகிறது. பூஜ்ஜிய நேரத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அரை மணி நேரத்திற்கு முன்னதாக பேரவைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனாலும் முதல்வர் கோரிக்கைக்கு ஏற்ப எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி அளித்தோம்.

வித்தியாசம் பார்ப்பதில்லை

பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசத்தை அரசு பார்ப்பதில்லை. ஜனநாயக ரீதியில் சட்டப்பேரவை நடைபெறுகிறது என தெரிவித்தார்.

ஆளுநருக்கு கருத்து சொல்ல அனுமதி இல்லை

ஆளுநர் உரையை முழுமையாக படிப்பார் என மீண்டும் நம்புகிறோம். ஆளுநருக்கு உரை நிகழ்த்துவதற்கு தான் அனுமதியே தவிர கருத்து சொல்வதற்கு அனுமதி இல்லை என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆளுநருக்கு உரிய மரியாதை வழங்கப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி வழங்கப்படும் என அப்பாவு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com