
பெங்களூரு: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92)மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கர்நாடகத்தில் வங்கிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு கர்நாடக அரசு வெள்ளிக்கிழமை(டிச.27) பொது விடுமுறை அறிவித்துள்ளது. திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92)உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இரரவு காலமானாா். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தும் வகையில் கர்நாடக அரசு இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவித்தது. மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை(டிச. 27) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.அன்னாரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் முதல்வர் அதிஷி தனது அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.