புதுச்சேரியில் பாமக பொதுக் குழுக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் நடைபெறும் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
புதுச்சேரி அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் நடைபெறும் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ்,கெளரவத் தலைவர். ஜி.கே. மணி,வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள்பங்கேற்றுள்ளனர்.

பொதுக்குழு தொடக்கமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சியின் வளர்ச்சி , எதிர்கால செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் ராமதாஸ் கருத்துக் கேட்டறிகிறார்.

பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com