நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆமைகளை வேட்டையாடிய 2 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் ஆமைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

News image

கோப்புப் படம்

Updated On :29 டிசம்பர் 2024, 4:52 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்திலுள்ள புலிகள் காப்பகத்தில் ஆமைகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலிபித் மாவட்டத்தில் தியோரியா சரங்கத்திற்கு உள்பட்ட புலிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. நேற்று (டிச.28) மாலை அப்பகுதியின் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள 16 வது பிரிவின் குளத்தில் ஆமைகளை வேட்டையாடிய ரஜ்னீத் ஹல்கார் மற்றும் உத்தம் பச்சார் ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், இந்த வேட்டையில் ஈடுபட்டு தப்பியோடி தலைமறைவாகிய அவர்களது கூட்டாளியான மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.

அவர்கள் வேட்டையாடிய 7 ஆமைகளில், 6 ஆமைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பிரிவு ஒன்றை சேர்ந்தவை என்றும், மற்றொன்று பாதுகாக்கப்பட்ட பிரிவு இரண்டை சேர்ந்த்து என அறியப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரின் மீதும் இந்திய வனவிலங்கு சட்டம் 1972 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீர்நிலைகளில் விடுவிக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.