ஒடிசா மாநிலத்திலிருந்து தப்பித்த பெண் புலியைப் பிடிக்க வனத்துறை காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் சிமிலிப்பால் வனப்பகுதியிலிருந்து தப்பித்து மேற்கு வங்கத்தின் பாங்குரா வனப்பகுதியினுள் நுழைந்த பெண் புலியைப் பிடிக்க அப்பகுதியின் அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திலிருந்து ஒடிசாவின் சிமிலிப்பால் வனப்பகுதிக்கு ஜீனத் எனும் பெண் புலியானது கொண்டுவரப்ப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் அப்பகுதியிலிருந்து தப்பித்த அந்த புலியானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் வனப்பகுதிகளை கடந்து தற்போது மேற்க்கு வங்கத்தின் பாங்குரா வனப்பகுதியில் சுற்றித் திரிவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த வனப்பகுதியைச் சுற்றியுள்ள பாதைகள் அடைக்கப்பட்டு அந்த புலியைப் பிடிக்கும் பணியில் 150 வனத்துறை அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், அந்த புலி இருக்கும் இடம் கண்டறியப்பட்டு அதற்கு சில கிலோமீட்டர் சுற்றளவிற்கு பிளாஸ்டிக் வலை அமைக்கப்பட்டு அந்த புலி மேலும் நகராமல் தடுக்கப்பட்டது.
இன்று (டிச.29) காலை நிலவரப்படி அந்த புலியின் மீது அதை செயலிழக்க செய்யும் மருந்து செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் மயக்க மருந்து செலுத்த கால்நடை மருத்துவர்களின் அனுமதிக்காக வனத்துறையினர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பாங்குரா வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, அந்த புலியின் நடமாட்டத்தை டிரோன்கள் மூலம் கண்கானித்து வருவதாகவும். ஆனால், அடர்த்தியான காடுகள் அதற்கு தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவூதி எண்ணெய் நிலையங்களில் ஹூதிக்கள் தாக்குதல்

பட்டுக்கோட்டை அருகே பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட 2-வது மகளும் உயிரிழப்பு

கால்நடைகள் வேட்டை: புலியை பிடிக்க வனத் துறையினா் தீவிரம்

கரடியைப் பிடிக்க கூண்டு: வனத்துறை நடவடிக்கை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



