மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

2 மாநிலங்களைக் கடந்த பெண் புலியைப் பிடிப்பதில் சிரமம்?

பெண் புலியைப் பிடிக்க வனத்துறையினர் போராடி வருவதைப் பற்றி..

News image

பெண் புலி ஜீனத்

Updated On :29 டிசம்பர் 2024, 2:06 pm IST

ஒடிசா மாநிலத்திலிருந்து தப்பித்த பெண் புலியைப் பிடிக்க வனத்துறை காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் சிமிலிப்பால் வனப்பகுதியிலிருந்து தப்பித்து மேற்கு வங்கத்தின் பாங்குரா வனப்பகுதியினுள் நுழைந்த பெண் புலியைப் பிடிக்க அப்பகுதியின் அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திலிருந்து ஒடிசாவின் சிமிலிப்பால் வனப்பகுதிக்கு ஜீனத் எனும் பெண் புலியானது கொண்டுவரப்ப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் அப்பகுதியிலிருந்து தப்பித்த அந்த புலியானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் வனப்பகுதிகளை கடந்து தற்போது மேற்க்கு வங்கத்தின் பாங்குரா வனப்பகுதியில் சுற்றித் திரிவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த வனப்பகுதியைச் சுற்றியுள்ள பாதைகள் அடைக்கப்பட்டு அந்த புலியைப் பிடிக்கும் பணியில் 150 வனத்துறை அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், அந்த புலி இருக்கும் இடம் கண்டறியப்பட்டு அதற்கு சில கிலோமீட்டர் சுற்றளவிற்கு பிளாஸ்டிக் வலை அமைக்கப்பட்டு அந்த புலி மேலும் நகராமல் தடுக்கப்பட்டது.

இன்று (டிச.29) காலை நிலவரப்படி அந்த புலியின் மீது அதை செயலிழக்க செய்யும் மருந்து செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் மயக்க மருந்து செலுத்த கால்நடை மருத்துவர்களின் அனுமதிக்காக வனத்துறையினர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பாங்குரா வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அந்த புலியின் நடமாட்டத்தை டிரோன்கள் மூலம் கண்கானித்து வருவதாகவும். ஆனால், அடர்த்தியான காடுகள் அதற்கு தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.