இடுக்கி: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் 22 வயது இளைஞர் பலியானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், முல்லரிங்காடு, வன விளிம்பு தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் இலாஹி(22). இவர் மேய்ச்சல் பகுதியில் இருந்து தனது பசுவை பிடித்து வந்துள்ளார். அப்போது வனத்தில் இருந்து திடீரென வந்த யானை இலாஹியை தாக்கியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார்.
யானையிடம் இருந்து சிறு காயங்களுடன் தப்பிய மன்சூர் இதுகுறித்து, அந்த பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள் காயமடைந்த இலாஹியை மீட்டு தொடுபுழா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இலாஹியின் உறவினா்கள், பொதுமக்கள் தொடுபுழாவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் அண்மைக் காலமாக வனவிலங்குகள், குறிப்பாக யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வதை காணமுடிகிறது என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாளவாடி அருகே சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்த காட்டு யானை!

ஏரியூா் அருகே ஒற்றை யானை தாக்கியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் படுகாயம்

காட்டு யானை தாக்கியதில் கேரள வன அலுவலா் பலத்த காயம்
வேப்பனஅள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



