வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மதிமுக இ.யூ.மு.லீ, கொ.ம.தே.க ஆகிய 3 கட்சிகளுக்கு திமுக சனிக்கிழமை தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய சற்று நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகிறார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவு தொடர்பாக வெள்ளிக்கிழமை(பிப்.24) தொகுதி உடன்பாடுகள் குறித்து திமுகவும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில்- இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
வேட்பாளர் அறிவிப்பு:
மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ் கணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.