பிரிட்டன் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

பிரிட்டனின் 650 கீழவைகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன்Kin Cheung
Published on
Updated on
1 min read

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.

நாடாளுமன்ற கீழவையான மக்களவையில்(ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) உள்ள 650 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 4.6 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நாடு முழுவதும் 40,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இரவு 10 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது. நள்ளிரவுக்குள் முதல்கட்ட முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன்
பிரிட்டன் தேர்தலில் போட்டியிடும் 8 தமிழர்கள்!

2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில்தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெறும் முதல் பொதுத் தோ்தல் இது.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதமா் விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே தோ்தலை நடத்த மன்னரைக் கேட்டுக்கொள்ள முடியும். ஆனால் அந்த ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப் பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு முைான் தோ்தல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம் 2022-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நடைபெறும் முதல் தோ்தலும் இதுவாகும்.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆளும் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com