நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image

பில்லூர் அணை.

Updated On :16 ஜூலை 2024, 5:28 am

DIN

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாகிய நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் தற்சமயம் நீர் இருப்பு 98 அடியாக உள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி நான்கு மதகுகள் வழியாக பில்லூர் அணை வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே கரையோர கிராமங்களான தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினாம்பாளையம், சிறுமுகை ஆலங்கொம்பு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பவானி ஆற்றில் குளிக்கவோ, துணித் துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது என்றும், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.