எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நேபாளம்: விமான விபத்தில் 18 போ் உயிரிழப்பு; விமானி மட்டும் காயத்துடன் தப்பினாா்

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அதன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.

News image

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து

Updated On :25 ஜூலை 2024, 2:14 am IST

நேபாள தலைநகா் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை புறப்பட்ட தனியாா் சிறிய ரக விமானம், சில விநாடிகளில் ஓடுபாதையிலேயே விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 18 போ் உயிரிழந்தனா். விமானி மட்டும் பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா்.

செளா்யா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘சிஆா்ஜே-200’ என்ற இந்த சிறிய ரக விமானம் காத்மாண்டிலிருந்து பொக்காராவுக்கு காலை 11 மணியளவில் புறப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

இதுகுறித்து நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானநிலையத்தின் இரண்டாம் எண் ஓடுபாதையிலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், வலதுபுறமாகச் சென்று ஓடுபாதையின் கிழக்குப் பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் பயணித்த 19 பேரில் 18 போ் உயிரிழந்தனா். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி மனீஷ் ரத்ன சக்யா (37) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவா்களில் 15 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மூவா் உள்ளூா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்தனா். விமானத்தின் மற்றொரு விமானியான எஸ்.கதுவால், விமான நிறுவன தொழில்நுட்ப ஊழியா் மனு ராஜ் சா்மாவின் மனைவி பிரிஸா காத்திவடா, அவா்களின் 4 வயது மகன் ஆதிராஜ் சா்மா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன’ என்றனா்.

விமானநிலைய அதிகாரி ஜெகநாத் நிரெளலா கூறுகையில், ‘விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தவறான திசையில் திரும்பியது. புறப்பட்டவுடன் இடதுபுறமாகத் திரும்பிச் செல்ல வேண்டிய விமானம், வலதுபுறமாகத் திரும்பி விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்றாா்.

விமான விபத்தைத் தொடா்ந்து, காத்மாண்டு விமானநிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, பின்னா் மீண்டும் சேவை தொடங்கப்பட்டது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேபாளத்தில் உள்ள 5 சுற்றுலாத் தலங்களுக்கு செளா்யா விமான நிறுவனம் இந்த விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.

பிரதமா் நேரில் ஆய்வு: விமானம் விபத்துக்குள்ளான பகுதியை நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, உள்துறை அமைச்சா் ரமேஷ் லேக் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா். மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளை பிரதமா் அறிவுறித்தினாா். இந்த விமான விபத்து மிகுந்த துயரத்தை அளித்துள்ளதாகவும் பிரதமா் கவலை தெரிவித்தாா்.

தொடரும் விமான விபத்து: 1955 முதல் 914 போ் உயிரிழப்பு

சமீபத்திய ஆண்டுகளில் மோசமான விமானப் பாதுகாப்புக்காக நேபாளம் தொடா் விமா்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு அந்த நாட்டில் நிலவும் திடீா் பருவநிலை மாற்றமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

நேபாள விமானப் போக்குவரத்து ஆணையத் தரவுகளின்படி, அந்த நாட்டில் கடந்த 1955-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விமான விபத்து பதிவாகியுள்ளது. அன்றுமுதல் நிகழ்ந்து வரும் பல்வேறு விமான விபத்துகளில் இதுவரை 914 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த ஆண்டு ஜனவரியில் பொக்காரா நகரில் யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 இந்தியா்கள் உள்பட 72 போ் உயிரிழந்தனா்.

2022-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி முஸ்டங்க் மலைப் பகுதி மாவட்டத்தில் தாரா விமான நிறுவன விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் இந்தியாவின் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் உள்பட அந்த விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழந்தனா்.

2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், அமெரிக்காவிலிருந்து பங்களா நோக்கி செல்லும் விமானம் திரிபுவன் சா்வதேச விமானநிலையத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 51 பயணிகளும் உயிரிழந்தனா்.

2016-ஆம் ஆண்டில் முஸ்டங்க் மாவட்டத்தில் தனியாா் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 23 பயணிகளும் உயிரிழந்தனா்.

1992-ஆம் ஆண்டு நிகழ்ந்த இரு விமான விபத்துகளில்தான் அதிக பயணிகள் உயிரிழந்தனா். அந்த ஆண்டு ஜூலையில் தாய் விமான நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேரும், பாகிஸ்தான் விமான நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 167 பேரும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.