கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு!

காவிரி பிரச்னை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை.

News image

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் துரை முருகன் சந்திப்பு.

Updated On :25 ஜூலை 2024, 7:51 pm IST

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தில்லியில் சந்தித்தார்.

புதுதில்லியில் இன்று (ஜூலை 25) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலையும், மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர்கள் வி. சோமண்ணா, மற்றும் ராஜ் பூஷன் செளத்திரியும் சந்தித்து தமிழ்நாட்டின் பன்மாநில நதிநீர் பிரச்னைகள், நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துதல், பாசன கட்டமைப்புகளை சீரமைக்கும் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்கள்.

மேலும், காவிரி பிரச்னை, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம், முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல், பெண்ணையாறு பன்மாநில நீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைத்தல், குளங்கள் சீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு நிதியில் உள்ள நிலுவை தொகையை விரைவில் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசின் தில்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கே. மணிவாசன், தமிழ்நாடு அரசின் கூடுதல் உள்ளுறை ஆணையர் (தமிழ்நாடு இல்லம்) ஆஷிஷ் குமார், இ. ஆ.ப., மற்றும் தலைவர், காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவு ஆர். சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.