பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்: ஒப்பந்ததாரருக்கு அபராதம்!

பாதாள சாக்கடை குழியில் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்: ஒப்பந்ததாரருக்கு அபராதம்!
Published on
Updated on
1 min read

பாதாள சாக்கடை குழியில் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100 அடி சாலை. இந்த சாலையின் இரு புறங்களிலும் வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு, பிறகு ஆங்காங்கே இருந்த பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே காணப்பட்டன.

இது குறித்து பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாக கூறப்படுகிறது.

பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்: ஒப்பந்ததாரருக்கு அபராதம்!
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் 6 பேர் கைது!

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவ்வழியே நடந்த சென்ற பெண் ஒருவர், திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கால் எலும்பில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com