வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகள்: அச்சத்தில் விளாங்குறிச்சி மக்கள்!

பராமரிக்கப்படாத குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளியேறும் பாம்புகளால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News image

விளாங்குறிச்சி மருதம் நகர் பகுதியில் புதர் மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் பகுதி.

Updated On :22 ஜூன் 2024, 9:36 am

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி மருதம் நகர் பகுதியில் முறையாக பராமரிக்கப்படாத குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளியேறும் பாம்புகளால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 32 ஆவது வார்டு விளாங்குறிச்சி மருதம் நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் தொட்டி உள்ளது.

குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் பகுதி புதரில் குடியிருப்புகளை நோக்கி வெளியேறும் விஷ ஜந்துகள்.

குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் பகுதி புதரில் குடியிருப்புகளை நோக்கி வெளியேறும் விஷ ஜந்துகள்.

தற்போது இந்த குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழலில் குடிநீர் தொட்டிக்கு கீழே சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்கு

வருவதால் அங்கு வசிப்பதற்கே அச்சமாக உள்ளதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதர் மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

புதர் மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

மேலும் இந்தப்பகுதியில் குழந்தைகள் விளையாடவே முடியாத சூழல் நிலவுவதாகவும், நடந்து செல்லவே பயமாக இருப்பதாகவும்,அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே செல்ல அச்சப்படுவதாக தெரிவித்தனர்.

மாநகராட்சி பணியாளர்களோ, குடிநீர் வடிகால்வாரிய பணியாளர்களோ விரைந்து சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும்  விளாங்குறிச்சி மக்கள்.

மாநகராட்சி பணியாளர்களோ, குடிநீர் வடிகால்வாரிய பணியாளர்களோ விரைந்து சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் விளாங்குறிச்சி மக்கள்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அந்த பகுதி மக்கள், அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் தண்ணீர் தொட்டி இருக்கின்ற இடத்தில் புதர் மண்டி கிடக்கும் அடா்ந்த பகுதியை மாநகராட்சி பணியாளர்களோ, குடிநீர் வடிகால்வாரிய பணியாளர்களோ விரைந்து சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அந்த பகுதி மக்கள், அப்படி செய்தால் தான் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் இருக்கும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.