பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாக குற்றச்சாட்டு: ஃபாக்ஸ்கான் மறுப்பு!

திருமணமான பெண்களை பணியமா்த்த மறுப்பதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :

திருமணமான பெண்களை பணியமா்த்த மறுப்பதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களைப் பணியமா்த்த மறுப்பதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், திருமணமான பெண்களைப் பணியமர்த்த மறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், “ சமீபத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணம் ஆகாத பெண்கள்” என்று தெரிவித்துள்ளது.

“திருமணமான பெண்களை பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் இல்லை, பாதுகாப்புக் காரணத்திற்காக பாலினம் மற்றும் மதத்தை பார்க்காமல் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் அணிய அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.