புதுதில்லி: அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
நீட் தேர்வு குறித்து எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்க முடிவுவெடுத்த பின் வியாழன் இரவு முதல் எங்களின் மின்னஞ்சல் வசதிகள் காலாவதியாகிவிட்டதாகச் சொல்லி முடக்குவது தான் பாஜகவின் ஜனநாயக மரபு.
இந்தச் செயலுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்.
"நீட் முறைகேடு" "நீட்டே ஒரு முறைகேடு தான்" இதனை அவசர பிரச்னையாக அவையில் விவாதிக்க வேண்டுமென வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.
நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க நாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார் சபாநாயகர் .
அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்

முதல்வரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா? தவெக கேள்வி

தேவாலயத்தில் பிரசாரம் தொடங்கினாா் மம்தா- மதரீதியான பிளவை அனுமதிக்க மாட்டோம் என உறுதி

வாக்கு கேட்டு வந்தால் அனுமதிக்க மாட்டோம்: மீனவ கிராம மக்கள்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


