கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இஸ்ரேல் போரில் பலியான முதல் இந்தியர்! பின்னணி...

கர்ப்பிணி மனைவியையும் 5 வயது குழந்தையையும் பிரிந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் வந்துள்ளார்

News image

குடும்பத்துடன் பட்நிபின் மேக்ஸ்வெல்

Updated On :5 மார்ச் 2024, 1:58 pm

இணையதளச் செய்திப் பிரிவு

லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட நபர் கேரளத்தைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருடன் புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகிய இருவரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் கேரளத்தைச் சேர்ந்தவர்களே.

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தெற்கு காஸாவில், தோட்டங்களில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்கள் பலர் இதில் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான பட்நிபின் மேக்ஸ்வெல், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர்.

தனது கர்ப்பிணி மனைவியையும் 5 வயது குழந்தையையும் பிரிந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் இஸ்ரேல் சென்றுள்ளார் பட்நிபின். அதுவே அவர் தனது குடும்பத்தினரை நேரில் பார்த்த கடைசி நாளாக இருக்கும் என்று அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை.

இது தொடர்பாக பேசிய பட்நிபின் மேக்ஸ்வெல்லின் தந்தை, பாத்ரோஸ் மேக்ஸ்வெல், ''தனது அண்ணனின் வழியைப் பின்பற்றி பட்நிபினும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றான். இதற்கு முன்பு மஸ்கட், துபையில் வேலை செய்து சொந்த மண்ணுக்குத் திரும்பினான். இங்கு சில நாள்கல் இருந்துவிட்டு, அதன் பிறகே இஸ்ரேலுக்குச் சென்றான். முதலில் என் மூத்த மகன் சென்றான். அவனின் உதவியால் இளைய மகனும் இஸ்ரேலுக்குச் சென்றான்.

இந்த துக்கச் செய்தியை என் மருமகள்தான் கூறினாள். இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் பட்நிபினுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக மாலை 4.30 மணிக்கு தகவல் கிடைத்தது. நள்ளிரவு 12.45 மணிக்கு அவன் இறந்துவிட்ட செய்தி வந்தது.

என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. 5 வயதில் குழந்தையும் உள்ளது. ஆவண சரிபார்ப்பு, சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து, என் மகன் பட்நிபினின் உடல் கேரளத்துக்கு வந்துசேர 4 நள்கள் ஆகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

என் 5 வயது குழந்தை அப்பாவுடன் பேசவேண்டும் என அடம்பிடித்தால் என்ன செய்வேன், இரண்டாவது குழந்தை பிறப்புக்கு இந்தியாவிற்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததாக அவரின் மனைவி கூறுகிறார்.

இஸ்ரேல் - ஹமாஸ் படைக்கு இடையிலான போரில் முதல்முறையாக இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கு - தெற்கு இஸ்ரேலில் வசித்துவரும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என இஸ்ரேலிலுள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக வடக்கு இஸ்ரேல், தெற்கு இஸ்ரேல் எல்லைகளில் சென்று வேலை செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசுடன் இந்திய துதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போரில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வரும் துயரத்திற்கு இடையில் முதல்முறையாக இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.