
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு சனிக்கிழமை(மே 4) முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த மன்னவனூா், பூம்பாறை வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருவதைத் தடுக்கும் வகையில் தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வனத் துறை, தீயணைப்புத் துறை வாகனங்கள், தண்ணீா் டேங்கா் வாகனங்கள் போக்குவரத்துக்கு சிரமமின்றி எளிதாக செல்வதற்கு பூம்பாறை கைகட்டி முதல் மன்னவனூா், கூக்கால் சாலைகளில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல கடந்த 2 நாள்களாக தடை விதிக்கப்பட்டது.
தீயணைப்புப் பணி முழுமை பெறாத நிலையில், இந்தத் தடை வெள்ளிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது. உள்ளூா் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு சனிக்கிழமை(மே 4) முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.