தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை(மே 5) கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மே 5 இல் விடுதலை முழக்க மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை(மே 5) கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மே 5 இல் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்றுகூட உள்ளதால் நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது
சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

மாநாட்டையொட்டி கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 5 தீா்மானங்கள் பிரகடன தீா்மானமாக கொண்டு வரப்பட உள்ளன. அந்த தீா்மானங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com