கலவரம் வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை

கலவரம் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கலவரம்  வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை
Published on
Updated on
1 min read

2023 இல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் மே 9 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம், அருங்காட்சியகம் என பல கட்டடங்கள் சேதமடைந்தன. கலவரத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கலவரம்  வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை
முறைகேடு வழக்கு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சிறை தண்டனை?

போராட்டத்தின்போது கலவரத்தை தூண்டியதாக இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், கலவர வழக்கில் இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் என நீதிமன்றம் தீர்ப்பளித்து வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்துள்ளது.

அதேசமயம் ஊழல் வழக்கில் கைதாகி உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அடியாலா சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com