ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

கவரைப்பேட்டை ரயில் விபத்து: தீ விபத்துக்கு காரணம் என்ன?

கவரைப்பேட்டை ரயில் விபத்தில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கவரைப்பேட்டை விபத்து - கோப்புப்படம்.

Updated On :5 நவம்பர் 2024, 5:20 am IST

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்தில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை, பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டதையடுத்து ரயில் விபத்துக்குக் காரணம் சதிச்செயலாய என தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

மேலும், விபத்து குறித்து கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனா்.

இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதியில் உள்ள சரக்கு மற்றும் ஜெனரேட்டா் இணைந்திருக்கும் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெனரேட்டரை இயக்குவதற்காக வைத்திருந்த டீசல் கேனில் இருந்து நெருப்பு பற்றி எரிந்திருக்கலாம் என ரயில்வே அலுவலா்களும், லோகோ பைலட்களும் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயிலில் டீசல் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை தனியாக கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். கவரைப்பேட்டை ரயில் விபத்தில் ஜெனரேட்டரில் உள்ள டீசல் கசிந்து நெருப்பு பற்றியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து முழுமையான விசாரணையை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நடத்தி வருகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.