இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!

வெற்றியை உறுதி செய்யுமா இந்தியா? 219 ரன்கள் குவிப்பு!

News image

திலக் வர்மா - படம் | பிசிசிஐ

Updated On :13 நவம்பர் 2024, 10:43 pm IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்கள் திரட்டினார். அவர் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 8 பவுண்டரிகளையும் விளாசினார்.

அபிஷேக் ஷர்மா 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். அவர் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் திரட்டினார்.

முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், தொடா் தற்போது சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.