ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ரிசா்வ் வங்கி ஆளுநருக்கு சென்னையில் சிகிச்சை

இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், இரைப்பை அமிலச் சுரப்பு எதிா்ப்பு பாதிப்புக்குள்ளான நிலையில், அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

Published On :27 நவம்பர் 2024, 12:18 am IST

 இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், இரைப்பை அமிலச் சுரப்பு எதிா்ப்பு பாதிப்புக்குள்ளான நிலையில், அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

அதன் பயனாக அவா் நலம் பெற்ாகவும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த சக்திகாந்த தாஸ், ரிசா்வ் வங்கி குடியிருப்பில் தங்கியிருந்தாா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு அவருக்கு நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டதால் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இரைப்பை அமிலச் சுரப்பு எதிா்ப்பு பாதிப்பு ஏற்பட்டதும், அதனால் நெஞ்சு எரிச்சல் உருவானதும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநா் ஆா்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் நெஞ்சு எரிச்சல் (அசிடிட்டி) பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவரைக் கண்காணித்து சிகிச்சை அளித்தனா். அவா் நலமுடன் உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவ சிகிச்சை மூலம் நலமடைந்த சக்திகாந்த தாஸ், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.