கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு

நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு.

News image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :10 அக்டோபர் 2024, 9:38 am

DIN

நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டிள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் வளவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்-ஆனந்தி தம்பதியரின் மகள் புனிதா, அண்மையில் நடந்த அரசு பாரா மெடிக்கல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்விலும் இடம் கிடைக்காத விரக்தியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு வியாழக்கிழமை வந்த அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மாணவியின் தாயாரிடம் அதிமுக சார்பில் கட்சி நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்தை வழங்கினார். அப்போது மாணவியின் தங்கை மற்றும் தாயாரிடம் மனம் தளராமல் இருக்குமாறு ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த தேர்தலின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என கூறினார். ஆனால் இதுவரை அது என்ன ரகசியம் என்று கூறவில்லை.

மேலும் நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரசும்,திமுகவும் அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுவதாகவும், ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம்.

நீட் தேர்வு ரத்துக்காக கையெழுத்து இயக்கம் நடத்தி அந்த கடிதங்களை மக்கள் காலடியில் போட்டுவிட்டு நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக அரசின் செயல்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.