நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாளை முதல்வரை சந்திக்கிறாா் தொல்.திருமாவளவன்

அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் நாளை திங்கள்கிழமை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன். - dotcom

Updated On :15 செப்டம்பர் 2024, 5:40 pm

சென்னை: அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் நாளை திங்கள்கிழமை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் அக்.2-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்தார். பின்னர், செய்தியாளா்களுடனான சந்திப்பின் போது, மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தது. தற்போது மதுவிலக்கை அமல்படுத்த அரசு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. மதுபானக் கடைகளை மூட அரசு காலக்கெடுவை நிா்ணயம் செய்ய வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.

மது ஒழிப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்கலாம். அதிமுகவுக்கு அழைப்பு உண்டா என்று கேட்கிறீா்கள். அதிமுகவும் பங்கேற்கலாம். இது மக்கள் பிரச்னை. ஜாதி, மதவாத சக்திகளைத் தவிர பிற கட்சிகள் பங்கேற்கலாம் என தெரிவித்தாா். மேலும், அவரது சமூகவலைதளப் பக்கத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அவா் பேசிய பழைய விடியோ வெளியிடப்பட்டு, பின் அழிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது, மதுஒழிப்பு மாநாட்டினை ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடாக பாா்க்க வேண்டும். இதனை விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கிறது. இதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் பெருகி வருவது தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது. தோ்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டை இணைத்து பாா்ப்பதாலே இவ்வளவு சா்ச்சை வருகிறது. இதை சமூக நலனுக்கானதாக பாா்க்க வேண்டும். 100 சதவீதம் தூய நோக்கத்துடன் மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம். இதில் எந்த ஒரு அரசியல் கணக்கும் இல்லை என தெரிவித்தார்.

இந்த விவகராம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினை நாளை திங்கள்கிழமை காலை தொல்.திருமாவளவன் தலைமை செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.