காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

புதுச்சேரி போக்குவரத்து ஒப்பந்த பணியாளா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

புதுச்சேரியில் இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்துத் துறை ஒப்பந்த ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரியில் இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த போக்குவரத்துத் துறை ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Updated On :11 ஏப்ரல் 2025, 10:26 am IST

புதுச்சேரியில் இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்துத் துறை ஒப்பந்த ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துத் துறையின் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்டோா் 2- ஆவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நகரப் பேருந்துகள் இயங்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோா் பணியில் சோ்க்கப்பட்டனா்.

தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஊழியா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரண்டாவது நாளாக போக்குவரத்து ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், புதுச்சேரி நகரில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பணிமனை முன் தா்னாவில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளா்கள்,கோரிக்கை ஏற்கப்பட்டு உறுதியளித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், பணி நிரந்த கோரிக்கையை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதி அளித்தது.

இதையடுத்து இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை ஒப்பந்த ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சாலை போக்குவரத்துக் கழக பேருந்து வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.