பின்னா் செய்தியாளா்கர்கள் அவரிடம் யுபிஐ கட்டணம் பயன்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், யுபிஐ எப்போதும் நுகர்வோர்களுக்கு இலவசமாகவே கிடைக்கும் என ஒருபோதும் நான் கூறவில்லை. இதற்கான கட்டணங்களை யாரேனும் ஒருவர் செலுத்தித்தான் ஆக வேண்டும். யுபிஐ பரிவர்த்தனை மாடல் அப்படியே நீடித்த நிலைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என நினைத்தால், அதற்கான செலவை யாரேனும் ஒருவர் செலுத்தித்தான் ஆக வேண்டும். ஆனால் அதனை தனிநபர்கள் செலுத்துகிறார்களா அல்லது அனைவரும் சேர்த்து செலுத்துகிறார்களா என்பதை கடந்து யாராவது ஒருவர் அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்பது முக்கியம். யுபிஐ பரிவர்த்தனை தற்போது கூட பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படவில்லை, யாரோ ஒருவர் அதற்கான கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் என்பதுதான் எனது கருத்து. அரசாங்கம் அதற்கு மானியம் வழங்குகிறது, ஆனால் எங்கோ, அதற்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டு வருகின்றன." எனவே யுபிஐ செயல்பாட்டிற்கான செலவுகளை யார் ஏற்க வேண்டும் என்பதை அரசாங்கம் இறுதியில் தீர்மானிக்கும் என்று மல்ஹோத்ரா கூறினார்.