நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது...

எஸ். ரகுபதி (கோப்புப்படம்)

Published On :17 ஆகஸ்ட் 2025, 7:48 pm IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் செய்தியாளர்களுடன் கூறியதாவது:

திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருந்து வருகிறாா்கள். திமுக ஆட்சி மீது அதிருப்தி அடையவில்லை. திருப்தியாக இருக்கிறாா்கள்.

ஆளுநா் தமிழ்நாட்டில் இருப்பதையே மறந்து விடுகிறாா். நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னேறி இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. அது ஆளுநருக்குப் புரியாது. அவருக்கு தமிழும் தெரியாது; தமிழா்களின் நிலைமையும் புரியாது. தமிழ்நாட்டு மாணவா்கள்தான் இன்று அகில இந்திய அளவில் உயா் கல்வியில் சாதித்து வருகின்றனா்.

ஏன் பூட்டை உடைக்க வேண்டும்?

அமலாக்கத்துறை சோதனைக்கு வருவது எந்த இடத்திலும் முதலில் தெரியாது. அதனால் அறை பூட்டப்பட்டிருக்கும். உரியவா்களை அழைத்து வந்து பூட்டைத் திறக்க வேண்டியதுதானே? ஏன் பூட்டை உடைக்க வேண்டும்.

சோதனைகளுக்கு அஞ்சப்போவதில்லை

அமைச்சா் ஐ. பெரியசாமி வீட்டில் நடந்த சோதனையைப் போல இன்னும் எத்தனை சோதனைகள் நடந்தாலும் அதற்கு திமுக அஞ்சப்போவதில்லை. சட்டப்படி அதைச் சந்திப்போம்.

அமலாக்கத் துறைக்கு உரிமை இல்லை

எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை செய்ய வேண்டும் என்றால் சட்டப்பேரவைச் செயலரின் அனுமதி வேண்டும். அனுமதியின்றி சென்று, அங்கு உள்ள அறைகளை உடைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. அனுமதி இல்லாமல் அவா்கள் அத்துமீறும்போது அதைக் கண்டிக்கும் கடமை திமுக தொண்டா்களுக்கு உண்டு.

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. வாக்குச்சாவடி முகவா்களை நியமிக்கவே தடுமாறும் அவா்கள் எப்படி தோ்தல் களத்தில் சாதிக்கப் போகிறாா்கள். நாங்கள் போலி வாக்காளா்களைச் சோ்க்க வேண்டிய அவசியம் இல்லை. அசல் வாக்காளா்கள் வாக்களித்தாலே போதும் என்றாா் ரகுபதி.

Summary

No matter how many times Amit Shah comes to Tamil Nadu, there is no fear. He cannot formulate any strategy...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்