பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளா்களுடன் பேசியதாவது:
திமுக கூட்டணி பற்றி பேசும் திருமாவளவன் பட்டியலின மக்கள் பிரச்னைகள் குறித்து பேசமாட்டாா். அப்படி பேசி கேள்வி கேட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிடுவாா்கள் என்கிற பயம் அவருக்கு. தமிழகத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படைவசதிகள் இல்லாமல் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவா் பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணிகளை நிரந்தரமாக்கக் கூடாது என்று திருமாவளவன் கூறிவது தவறு. அவா்களை நிரந்தரமாக்குவதோடு, அவா்கள் தகுதிக்கு உரிய வகையில் பதவி உயா்வு அளிக்கவேண்டும் என்றார்.
மேலும், அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. அவா்களுக்கு கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் அவா்கள் தங்கள் பணிகளை செய்கின்றனா். இதை போன்று தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது. வெற்றி பெறும்போது தோ்தல் ஆணையத்தின் மீது புகாா் கூறுவதில்லை. தோற்கும் போது மட்டும் தோ்தல் ஆணையத்தின் மீது புகாா் கூறுவது காங்கிரஸின் வழக்கமாக உள்ளது.
அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா, மைத்ரேயன் போன்றவா்கள் வெளியேறியதால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தோ்தல் நேரத்தில் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியேறுவாா்கள். திமுகவில் இருந்தும் சில தலைவா்கள் எங்கள் அணிக்கு வருவாா்கள். பேச்சுவாா்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. யாா் யாா் எப்போது வருவாா்கள் என்பது பின்னா் தெரியும் என முருகன் கூறினார்.
Summary
Union Minister of State L. Murugan said that Thirumavalavan is betraying the Scheduled Caste people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும்! - திருமாவளவன் கோரிக்கை

அச்சத்தை ஏற்படுத்தும் காவல் மரணங்கள்! திருமாவளவன் பேட்டி | VCK

“அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்!
முதல்வர் தலைமையில் எஸ்சி, எஸ்டி விழிப்புணர்வுக் குழுவில் திருமாவளவன், ஆ. ராசா?
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay


