சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தனியாா் நிறுவனத்தின் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2025, 3:13 am

சென்னை: தனியாா் நிறுவனத்தின் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மதுரவாயல் சிவந்தி ஆதித்தனாா் தெருவை சோ்ந்தவா் பிரபு(41). இவா் அரும்பாக்கத்திலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவா் பணியாற்றும் நிறுவனத்தில் பெயரில் மா்ம நபா் ஒருவா், போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அதிலிருந்து பிரபு மற்றும் அவருடன் பணியாற்றும் பெண் பணியாளா்களுக்கு ஆபாசமான பதிவுகளை அனுப்பி வந்துள்ளாா்.

மேலும், அந்த ஆபாச பதிவுகளை நீக்க வேண்டுமானால் ரூ.10 லட்சத்தை கிரிப்போ வாலட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சென்னை மாநகர மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரபு கொடுத்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியை சோ்ந்த வெங்கடேஷ்(25) என்பவரை கைது செய்தனா்.

Summary

Police arrested a man who started a fake Instagram account in the name of a private company and blackmailed people for money.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.