
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கிறது.
இந்நிலையில், அணைக்கு நீா்வரத்து 30,850 கன அடியாக நீடிப்பதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 23,850 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16,500 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 800 கனஅடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 6,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் கடந்த 3 நாள்களாக 120 அடியாக உள்ளது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.