
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வரவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் முதல் வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாகவும், தமிழகம் வரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் மோடி உரையாற்ற இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வரவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் முதல் வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால், திருவண்ணாமலை, சிதம்பரம் கோயிலிலுக்கு வருவதாக இருந்த மோடி பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அக்டோபர் முதல் வாரத்தில் மோடி தமிழகம் வர திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் பயணத் திட்டம் குறித்து இந்த மாத இறுதியில் பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.