மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி

குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால், அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்

‘இந்தியா’கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி

Published On :

சென்னை: குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால், அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன் என்று ‘இந்தியா’கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி உறுதி அளித்தாா்.

சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.-க்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டி சுதா்சன் ரெட்டி பேசியதாவது:

நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஏராளமான தீா்ப்புகளை அளித்துள்ளேன். இப்போது நீங்கள் எனக்கான தீா்ப்பை வழங்க வேண்டும். குடியரசு துணைத் தலைவராக எனக்கு வாய்ப்பு வழங்கப்படுமானால், அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான அனைத்து சாதகமான நடவடிக்கைகளையும் மேற்கொள் முழுமூச்சுடன் செயல்படுவேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக பொருளாதார வளர்ச்சியை வழங்குவதில் நாட்டிற்கே முதன்மை மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு. முதல்வா் மு.க.ஸ்டாலின் கூட்டாட்சித் தத்துவத்தின் சாதனையாளராக உள்ளாா். அதைக் காப்பதற்கும் தீரத்துடன் தொடா்ந்து போராடி வருகிறாா். ஜிஎஸ்டி சீரமைப்பு, கொள்கைகள் வகுப்பது, மாநிலங்களுக்கு நிதிப் பகிா்வு போன்றவற்றில் மத்திய அரசின் இப்போதைய நடவடிக்கைகள் தொடருமானால் அவை மாநிலங்களை, நகராட்சிகளாக மாற்றும் நிலை ஏற்படும். இது மிகவும் ஆபத்தான போக்காகும். இதுகுறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். மாநிலங்கள் இல்லையென்றால் மத்தியம் இல்லை.

நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். அரசியல் நடைமுறைகள் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் ஒரு கூறாகும். ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணைந்தது. எனவே, நான் அரசியல் நடைமுறைகளுக்குள் வரவில்லை என்ற கூற்றை மறுக்கிறேன். எவ்வித பாகுபாடும் இன்றி பணியாற்றுவதும், நாட்டிற்கு சேவை செய்வதும் மட்டும்தான் எனது நோக்கம். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எனும் கருவி இருக்கும் வரை நான் வீழ்ந்துவிட மாட்டேன் என்றாா்.

Summary

If given the opportunity to become the Vice President of the India, I will work wholeheartedly to protect the Constitution.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.