விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 16 ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பாக...

News image

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே நினைவஞ்சலி செலுத்திய மக்கள் மற்றும் ஆசிரியர்கள்

Updated On :3 டிசம்பர் 2025, 2:33 pm IST

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 16 ஆண்டு நினைவஞ்சலி புதன்கிழமை(டிச.3) செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வேன், 2009 ஆம் ஆண்டு டிச. 3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள், 5 சிறுவர்கள் உள்பட 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தனர்.

அஞ்சலி செலுத்திய நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள்,

அஞ்சலி செலுத்திய நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள்,

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே புதன்கிழமை(டிச.3) 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், மக்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.