மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 16 ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பாக...

News image
நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே நினைவஞ்சலி செலுத்திய மக்கள் மற்றும் ஆசிரியர்கள்
Updated On :3 டிசம்பர் 2025, 9:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 16 ஆண்டு நினைவஞ்சலி புதன்கிழமை(டிச.3) செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வேன், 2009 ஆம் ஆண்டு டிச. 3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள், 5 சிறுவர்கள் உள்பட 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தனர்.

அஞ்சலி செலுத்திய நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள்,

அஞ்சலி செலுத்திய நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள்,

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே புதன்கிழமை(டிச.3) 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், மக்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.