

மும்பை: வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம் குறைந்துள்ளதன் காரணமாக, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
மும்பையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் (ரெப்போ வட்டி) குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை இந்திய ரிசர்வ் வங்கி கூடி முக்கிய முடிவுகள் எடுக்கும்.
அந்த வகையில், டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற்ற மூன்று நாள் கூட்டத்தின் முடிவின்படி, வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:
வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம் குறித்து இரு மாத நாணயக் கொள்கை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கட்டது. அதன்படி, வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம் குறைந்துள்ளதன் காரணமாக, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைந்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதால், வீடு, வாகனக் கடனுக்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.