தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்வு ரத்து...

News image

சாகித்ய அகாதெமி விருது

Updated On :18 டிசம்பர் 2025, 10:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்ய அகாதெமி விருது கருதப்படுகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வமாக 24 மொழிகளிலிருந்து கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளுக்காக எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், இன்று 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

ஆனால், விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதால் இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், செய்தியாளர்களுடனான சந்திப்பையும் சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில் 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதை,
திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (ஆய்வு நூல்) நூலுக்காக எழுத்தாளர் ஆ. இரா.வேங்கடாசலபதி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.