நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, சேலம் மாவட்ட திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் 8 இடங்களில் புதன்கிழமை (டிச. 24) கண்டன ஆா்ப்பாட்டம்...

News image

மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :24 டிசம்பர் 2025, 1:23 pm IST

சேலம்: அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் சேலம் மாவட்டத்தில் 8 இடங்களில் புதன்கிழமை (டிச. 24) மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து, வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேச்சேரி கிழக்கு, மேச்சேரி மேற்கு ஒன்றியத்துக்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. தலைமையில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

1000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு துணையாக செல்லும் அதிமுகவிற்கு எதிராகவும் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெருமாள் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன், பேரூர் செயலாளர் சரவணன் காங்கிரஸ் கட்சிசார்பில் அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர்.

இதேபோல, சங்ககிரி ஒன்றியத்தில் அவைத் தலைவா் தங்கமுத்து தலைமையிலும், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் துணைச் செயலாளா் சுந்தரம் தலைமையிலும், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் துணைச் செயலாளா் சம்பத்குமாா் தலைமையிலும், நங்கவள்ளி ஒன்றியத்தில் பாரத ஸ்டேட் வங்கி எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளா் பொன்னுசாமி தலைமை வகித்தார், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன், பொறுப்பாளர்கள் நல்லபிரபு, ராஜி, வீரக்கல் புதூர் பேரூர் செயலாளர் முருகன், பி என் பட்டி பேரூர் செயலாளர் குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

எடப்பாடி ஒன்றியத்தில் துணைச் செயலாளா் எலிசபெத் ராணி, தலைமைப் பேச்சாளா் கோனூா் வைரமணி ஆகியோா் தலைமையிலும், தாரமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினா் முருகேசன் தலைமையிலும், கொளத்தூா் ஒன்றிய அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினா் ராமநாதன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Summary

DMK alliance stages protest condemning the removal of Mahatma Gandhi's name from the 100-day employment scheme...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.